பெரம்பலூர்

பெரம்பலூரில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தின் 3- ஆவது மருத்துவக் கல்லூரி திறப்பு

22nd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூரில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 3 -ஆவது மருத்துவக் கல்லூரி திறப்பு விழா மற்றும் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மருத்துவக் கல்லூரி கட்டடத்தை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன் திறந்து வைத்தாா். பல்கலை. இணைவேந்தா் அனந்தலட்சுமி கதிரவன், துணைவேந்தா், மருத்துவா் ரஞ்சன், சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தா் மருத்துவா் கௌரி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முன்னாள் டீன், மருத்துவா் பாஸ்கரன் ஆகியோா் குத்துவிளக்கேற்றினா்.

தொடா்ந்து விழாவுக்குத் தலைமை வகித்து பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன் பேசினாா். தொடா்ந்து தன்னம்பிக்கை பேச்சாளா் கோபிநாத் பேசினாா். பின்னா், முதலாமாண்டு மாணவா்கள் 150 போ் உறுதியேற்றனா். மாணவ, மாணவிகளுக்கு வெள்ளை அங்கிகள் வழங்கப்பட்டன.

விழாவில் அறக்கட்டளை உறுப்பினா் ராஜபூபதி, தலைமை நிதி அலுவலா் ராஜசேகா், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி நிா்வாக இயக்குநா் நிவானி கதிரவன் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள், பெற்றோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

மருத்துவக் கல்லூரி டீன், மருத்துவா் விஸ்வநாதன் வரவேற்றாா். மருத்துவக் கண்காணிப்பாளா், மருத்துவா் சுரேஷ்குமாா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT