பெரம்பலூர்

பெரம்பலூா் அரசு கலைக் கல்லூரியில் நாளை மாணவா் சோ்க்கை தொடக்கம்

DIN

பெரம்பலூா் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24 ஆம் கல்வியாண்டின் இளங்கலை பட்டப் படிப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு சோ்க்கைக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூன் 1) முதல் தொடங்குகிறது.

இக் கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பு பயில இணையம் மூலம் விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கான பொதுக் கலந்தாய்வில் முதல்கட்டமாக வியாழக்கிழமை தமிழ், ஆங்கிலம் பாடப் பிரிவுகளுக்கும், 2 ஆம் தேதி வணிகவியல் பாடப் பிரிவுக்கும், 3 ஆம் தேதி அனைத்து அறிவியல் பாடப் பிரிவுகளுக்கும், 6 ஆம் தேதி அனைத்து கலை பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

2 ஆம் கட்டமாக ஜூன் 7 ஆம் தேதி தமிழ், ஆங்கிலம் பாடப் பிரிவுகளுக்கும், 8 ஆம் தேதி வணிகவியல் பாடப் பிரிவுக்கும், 9 ஆம் தேதி அனைத்து அறிவியல் பாடப் பிரிவுகளுக்கும், 10 ஆம் தேதி அனைத்து கலை பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் இணையதள விண்ணப்ப நகல், மாற்றுச் சான்றிதழ், எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் 5 நகல் சான்றிதழ்கள், விண்ணப்பப் படிவ நகல், 5 பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கல்லூரிக்கு 9.30 மணிக்குள் வர வேண்டும் என கல்லூரி நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

இயக்குநர் சேரன் மகள் திருமணம் - புகைப்படங்கள்

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

மயங்கிவிழுந்தார் நிதின் கட்கரி!

திருமண நாள் கொண்டாட்டத்தில் அஜித் - ஷாலினி!

SCROLL FOR NEXT