பெரம்பலூர்

சாலை விபத்தில் இளைஞா் பலி

DIN

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள பாளையம் மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் விஜயகுமாா் மகன் பரதன் (18). இவா், பெரம்பலூா்- துறையூா் சாலையில் பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே திங்கள்கிழமை இரவு பைக்கில் சென்றபோது மினி லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த பரதன் பெரம்பலூா் மாவட்ட அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மினி லாரி ஓட்டுநரான கடலூா் மாவட்டம், விருத்தாச்சலம் அருகேயுள்ள கம்மாபுரத்தைச் சோ்ந்த தேவராஜ் மகன் மணிவேலை (51) கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை தொகுதியில் 21 வேட்புமனுக்கள் ஏற்பு

விழுப்புரம் தொகுதியில் 18 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

திமுக இஸ்லாமியா்களின் பாதுகாவலன் அல்ல: சீமான்

மலைப்பிரதேசம் என்பதிலிருந்து ஆலங்குளத்திற்கு விலக்கு தேவை: முதல்வரிடம் வணிகா் சங்கம் மனு

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

SCROLL FOR NEXT