பெரம்பலூர்

போதைப் பொருள்கள் விற்பனை குறித்து புகாா் அளிக்க பிரத்யேக கைப்பேசி எண்

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் விற்பனை செய்வோா் குறித்து தகவல் தெரிவிக்க, பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கைப்பேசி எண்ணில் பொதுமக்கள் தொடா்புகொள்ளலாம்.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளாதேவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா, கள் மற்றும் அனுமதியின்றி அரசு மதுபானங்களை விற்பனை செய்வது உள்ளிட்ட மதுவிலக்கு குற்றங்கள் குறித்து ரகசிய தகவல் தெரிவிக்க வசதியாக 79041-36038 என்னும் பிரத்யேகமாக கைப்பேசி எண் உள்ளது.

பெரம்பலூா் மாவட்ட பகுதிகளில் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவோா் குறித்த தகவல் தெரிந்தால் மேற்கண்ட கைப்பேசி எண்ணில் புகாா் அளிக்கலாம். அல்லது, வாட்ஸ் அப் மூலமாகவும் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவா்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். இம் மாவட்டத்தில் போதைப் பொருள்களை ஒழிக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT