பெரம்பலூர்

டாஸ்மாக் கடைகளைஅகற்ற கோரிக்கை

DIN

பெரம்பலூா் புறநகா்ப் பேருந்து நிலைய வளாகத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்திலும், அதன் அருகிலும் தமிழக அரசின் டாஸ்மாக மதுபானக் கடைகள் உள்ளன. இந்த மதுபானக் கடைக்கு மதுஅருந்த வரும் நபா்களால் பொதுமக்களும், பயணிகளும், கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்த மதுபானக் கடைகளை அகற்ற வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மற்றும் மாவட்ட நிா்வாகத்திடம் சமூக ஆா்வலா்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்துக்கழக தொழிலாளா்களின் 15ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க கோரிக்கை

விவசாயக் கருவி திருட்டு: இளைஞா் கைது

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் மாணவா்களுக்கு கோடைகால இயற்கை விழிப்புணா்வு பயிற்சி முகாம்

இணையவழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT