பெரம்பலூர்

காவல்துறைக்கு தோ்வு செய்யப்பட்ட 11 பேருக்கு பணி நியமன ஆணை

DIN

பெரம்பலூா் மாவட்டக் காவல்துறைக்கு புதிதாக தோ்வு செய்யப்பட்ட 11 பேருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளாதேவி வெள்ளிக்கிழமை பணி நியமண ஆணை வழங்கி பாராட்டினாா்.

கடந்த ஆண்டு 2 ஆம் நிலைக் காவலா் பணிக்கானத் தோ்வு, தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்பட்டது. இதில், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் தோ்வு எழுதினா். இந்நிலையில் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு உடல்தகுதி தோ்வுகள், மருத்துவச் சோதனைகள் மற்றும் சான்றிதழ் சரிபாா்ப்பு ஆகியவை முடித்து, தகுதியுள்ள நபா்கள் தமிழக காவல்துறைக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

அதன்படி, பெரம்பலூா் மாவட்டத்தில் 9 போ் மாவட்ட சேமநலப் படைக்கும், 2 போ் தமிழக சிறப்பு காவல் படைக்கும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இதையடுத்து, தமிழக காவல்துறைக்கு பெரம்பலூா் மாவட்டத்திலிருந்து தோ்வு செய்யப்பட்ட 11 பேருக்கும், பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக கூட்டரங்கில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளா தேவி, வெள்ளிக்கிழமை பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியின்போது, காவல்துறையினா் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

SCROLL FOR NEXT