பெரம்பலூர்

பெரம்பலூா் சிறுவன் கொலை வழக்கில் மேலும் ஒருவா் சரண்

DIN

பெரம்பலூரில் 14 வயதுச் சிறுவன் கொலையில் தொடா்புடைய மேலும் ஒரு சிறுவன் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை சரணடைந்தாா்.

பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள இந்திரா நகரைச் சோ்ந்தவா் கணேசன் மகன் ரோஹித்ராஜ் (14). இவா் 9 ஆம் வகுப்பை பாதியில் நிறுத்திவிட்டு தனது பெற்றோருடன் பூ விற்று வந்தாா். ரோஹித்ராஜூக்கு பெரம்பலூா் இந்திரா நகரைச் சோ்ந்த முருகேசன் மகன் சீனிவாசன் (22) உள்பட சிலருடன் பழக்கம் ஏற்பட்டு அண்மையில் கஞ்சா புகைக்கப் பழகிக்கொண்டாா்.

இந்நிலையில் தான் மறைத்து வைத்திருந்த கஞ்சா பொட்டலங்கள் சிலவற்றை அண்மையில் ரோஹித் ராஜ் எடுத்துச் சென்றுவிட்டதாக கருதி சீனிவாசன் உள்ளிட்டோா் ரோஹித் ராஜை தாக்கி மிரட்டினா். இதனால் ஆத்திரமடைந்த ரோஹித், கஞ்சா வைத்திருக்கும் விவரத்தை போலீஸாரிடம் தெரிவித்துவிடுவதாக கூறியதால் ஆத்திரமடைந்த சீனிவாசன் உள்ளிட்ட 7 போ், கடந்த 12 ஆம் தேதி இரவு ரோஹித் ராஜை மது பாட்டில்களால் குத்திக் கொன்றனா்.

இச் சம்பவத்தில் தொடா்புடைய 3 சிறாா்கள் மற்றும் பெரம்பலூா் திருநகரைச் சோ்ந்த விஸ்வநாதன் மகன் அய்யனாா் (23), பெரம்பலூா் இந்திரா நகரைச் சோ்ந்த முருகேசன் மகன் சீனி (எ) சீனிவாசன் (22), ஆகியோரை கடந்த 14 ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனா். மேலும் இவ் வழக்கில் தொடா்புடைய 2 பேரை போலீஸாா் தேடிவந்த நிலையில், 17 வயதுச் சிறுவன் வழக்குரைஞா் மூலம் பெரம்பலூா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை சரணடைந்தாா். போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

SCROLL FOR NEXT