பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு

DIN

பெரம்பலூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் புள்ளிமான் உயிரிழந்தது வியாழக்கிழமை அதிகாலை தெரியவந்தது.

பெரம்பலூா் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் அதிகளவில் உள்ள மயில், மான், காட்டுப் பன்றி உள்ளிட்டவை தங்களுக்குத் தேவையான உணவு மற்றும் தண்ணீா் கிடைக்காததால், குடியிருப்புகளுக்கும், விளைநிலங்களுக்கும் சென்று விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றன.

இந்நிலையில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் கருப்பண்ணசாமி கோயில் அருகே வியாழக்கிழமை அதிகாலை சாலையைக் கடக்க முயன்ற 2 வயது பெண் புள்ளிமான் அவ்வழியேச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற வனத்துறையினா், மான் உடலைக் கைப்பற்றி கால்நடை மருத்துவா் மூலம் பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT