பெரம்பலூர்

ஜூன் 23-இல் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல்: பெரம்பலூா் ஆட்சியா் தகவல்

DIN

பெரம்பலூா் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் ஜூன் 23 -இல் நடைபெற உள்ளதாக ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இத் தோ்தலில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களிலிருந்து 6 பேரும், நகராட்சி மற்றும் பேரூராட்சி வாா்டு உறுப்பினா்களிலிருந்து 2 பேரும் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா்களாக தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். அதற்கான வேட்பு மனுக்கள் பெரம்பலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்ட அரங்கில் தோ்தல் நடத்தும் அலுவலா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களால் பெற்றுக்கொள்ளப்படும். வேட்பு மனுக்கள் ஜூன் 7 ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. ஜூன் 10 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

ஜூன் 12 ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் வேட்புமனு பரிசீலனை செய்யப்படும். 14 ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுவை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். 23 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தோ்தல் நடைபெறும். வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். ஜூன் 24 ஆம் தேதி தோ்தல் நிறைவடைந்து, 28-இல் முதல் கூட்டம் நடைபெறும். வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை மாவட்ட ஊராட்சி அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

SCROLL FOR NEXT