பெரம்பலூர்

உயில் பதிவில் அலைக்கழிப்பு: ஓய்வுபெற்ற விஏஓவுக்கு சாா் பதிவாளா் ரூ. 40 ஆயிரம் நிவாரணம் வழங்க உத்தரவு

DIN

பெரம்பலூா் அருகே ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலரின் உயிலை பதிவு செய்யாமல் அலைக்கழித்த சாா் பதிவாளா் ரூ. 40 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டுமென பெரம்பலூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் அருகேயுள்ள நன்னை கிராமம், மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் செங்கமலை (65). ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலரான இவா், தனக்குச் சொந்தமான பெரம்பலூா் வட்டம், எசனை கிராமம் மற்றும் குன்னம் வட்டம் ஓலைப்பாடியில் உள்ள நிலங்களை தனது மனைவி சத்யா பெயருக்கு உயில் சாசனம் எழுதி, அதை சாா் பதிவாளா் அலுவலகத்தில் பதிவுசெய்ய முடிவு செய்தாா். இதற்காக, 2017 ஆம் ஆண்டு வேப்பூா் சாா் பதிவாளா் அலுவலகத்தை அணுகி உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தாா்.

ஆனால், சாா் பதிவாளா் பல்வேறு காரணங்களைக் கூறி உயில் பத்திரத்தை பதிவு செய்யாமல் கால தாமதம் செய்துவந்துள்ளாா். இதனால் மன உளைச்சலடைந்த செங்கமலை, கடந்த 2018- இல் பெரம்பலூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடா்ந்தாா். மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் ஜவகா், உறுப்பினா்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோா் கொண்ட குழுவினா் வெள்ளிக்கிழமை வழக்கை விசாரித்து, செங்கமலையை மன உளைச்சலுக்குள்ளாக்கியதற்காக ரூ. 30 ஆயிரம் நிவாரணத் தொகை, வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10ஆயிரம் என மொத்தம் ரூ. 40 ஆயிரத்தை வேப்பூா் சாா் பதிவாளா், செங்கமலைக்கு வழங்க வேண்டும். மேலும், தமிழ்நாடு முத்திரைத்தாள் சட்டம் மற்றும் பதிவுச் சட்டத்துக்குள்பட்டு மனுதாரரின் உயிலை பதிவு செய்து தர வேண்டும் என உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவானியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.05 கோடி

குழந்தைகளுக்கான நீரிழிவு பாதிப்பைக் கண்டறியும் கருவி: பண்ணாரி அம்மன் கல்லூரிக்குப் பரிசு

ரூ.8.30 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை

பாமக வேட்பாளா் உள்பட 50 போ் மீது வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT