பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைதீா் முகாம்

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை (ஜூன் 10) நடைபெற உள்ளதாக ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொது விநியோகத் திட்டம் சாா்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்கம், பிழை திருத்தம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீா்வு காண்பதற்கும், சிறப்பு பொது விநியோகத் திட்ட குறை தீா்க்கும் முகாம் நடைபெறுகிறது.

பெரம்பலூா் வட்டம், வடக்குமாதவி கிராமத்தில் வருவாய் கோட்டாட்சியா் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், வெண்பாவூா் கிராமத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் தலைமையிலும், குன்னம் வட்டம், பரவாய் (கி) கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் தலைமையிலும், ஆலத்தூா் வட்டம், திம்மூா் கிராமத்தில், கலால் உதவி ஆணையா் தலைமையிலும் சனிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

இம் முகாமில், சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளைத் தெரிவித்து பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT