பெரம்பலூா் மாவட்டம், மங்களமேடு உட்கோட்டத்தில் அனைத்து மகளிா் காவல் நிலையத்தை, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநா் சி. சைலேந்திரபாபு, காணொலிக் காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
இதையடுத்து பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளாதேவி இந்தக் காவல் நிலையத்தை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் மதியழகன் (தலைமையிடம்) வேலுமணி (மதுவிலக்கு அமலாக்க ப்பிரிவு) துணைக் கண்காணிப்பாளா்கள் சீராளன் (மங்களமேடு உட்கோட்டம்) பழனிச்சாமி (பெரம்பலூா் உட்கோட்டம்) மற்றும் காவல் ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.