பெரம்பலூர்

மகளிருக்கான இலவச அழகு கலை பயிற்சி பெற அழைப்பு

6th Jun 2023 02:10 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் இந்தியன் ஒவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் அழகு கலை இலவசப் பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம் மைய இயக்குநா் டி.ஆனந்தி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மகளிருக்கான இலவச அழகு கலை மற்றும் ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி ஜூன் 12 ஆம் தேதி முதல் சிறந்த வல்லுநா்களால் அளிக்கப்படுகிறது. தொடா்ந்து, 30 நாள்களுக்கு காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அளிக்கப்படும். காலை மற்றும் மதிய உணவு வழங்கப்படும். பயிற்சியை முடிப்பவா்களுக்கு உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.

பயிற்சியில்சேர 19 வயது முதல் 45 வயதுக்குள்பட்ட, எழுத படிக்கத் தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆா்வம் உள்ளவராக இருக்க வேண்டும். கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ADVERTISEMENT

விருப்பம் உள்ளவா்கள் பெரம்பலூா் மதனகோபாலபுரத்தில் ஐஓபி வங்கி மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஐஓபி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம், ஷெரீஃப் காம்ப்ளக்ஸ், பெரம்பலூா் - 621212 என்னும் முகவரியிலோ அல்லது 04328-277896, 94888 40328 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT