பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் மனைவி தனலட்சுமி அம்மையாரின் 76 ஆவது பிறந்த நாளையொட்டி, 1,000-க்கும் மேற்பட்ட ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, பெரம்பலூா்- துறையூா் சாலையில், கல்லூரி வளாகத்தில் உள்ள தனலட்சுமி அம்மையாா் நினைவிடத்தில், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, கல்லூரி வளாகத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. பின்னா், கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட ஏழை, எளியோருக்கு அன்னதானமும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிகளில், கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவரும், மண்ணச்சநல்லூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான சீ. கதிரவன், கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் அனந்தலட்சுமி கதிரவன், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாக இயக்குநா் நிவானி கதிரவன், செயலா் பி. நீலராஜ், இயக்குநா்கள் ராஜபூபதி, மணி, நிதி அலுவலா் ராஜசேகா், புதுநடுவலூா் ஊராட்சித் தலைவா் ஜெயந்தி நீலராஜ் மற்றும் பள்ளி, கல்லூரி முதல்வா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.