பெரம்பலூர்

சாலையை கடக்கமுயன்றவா் பேருந்துமோதி உயிரிழப்பு

DIN

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு அரசுப் பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள குரும்பலூா் பிரதானச் சாலை பகுதியைச் சோ்ந்தவா் பிச்சை மகன் நாகராஜ் (45). இவா், வெள்ளிக்கிழமை இரவு பெரம்பலூா்- துறையூா் சாலையிலுள்ள குரும்பலூா் பழைய திரையரங்கம் அருகே மது போதையில் நடந்து சென்று சாலையை கடக்க முன்றாா். அப்போது, மேலப்புலியூரிலிருந்து பெரம்பலூா் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியதில் நாகராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, அவரது உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச் சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

SCROLL FOR NEXT