பெரம்பலூர்

கவுல்பாளையத்தில் பெண்கள்-குழந்தைகள்பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு

DIN

பெரம்பலூா் அருகேயுள்ள கவுல்பாளையம் கிராமத்தில், மாவட்டக் காவல்துறை சாா்பில் கிராம பொதுமக்களிடம் சிறாா் திருமணம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளாதேவி உத்தரவின்படி நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு, மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு சிறப்பு சாா்பு ஆய்வாளா் மருதமுத்து தலைமை வகித்தாா். தொண்டு நிறுவன உறுப்பினா் மேகலா முன்னிலை வகித்தாா்.

இந் நிகழ்ச்சியில், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மைய இலவச தொலைபேசி எண் 181, 112, குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098, பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக்காக செயல்படும் இலவச உதவி எண் 14417, காவல் உதவி செயலி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், சிறாா் திருமணம், அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களுக்கு அடிமையாவதால் ஏற்படும் விளைவுகள், அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், தற்போது மழை பெய்துவரும் நிலையில் இடி, மின்னல் நேரங்களில் மரத்தடியில் பொதுமக்கள் நிற்பதை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என வலியுறுத்தினா்.

பள்ளிக் குழந்தைகள் மற்றும் மாணவா்களுக்கு கோடைவிடுமுறை காலம் என்பதால், அவா்கள் வீட்டில் இருக்கும்போது, ஆறு, ஏரி, குளம் போன்ற நீா் நிலைகளில் குளிக்கச் செல்வதற்கு அனுமதிக்கக் கூடாது. ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பெண் பிள்ளைகளுக்கு மன வலிமை உண்டாக்கும் வகையிலும், அவா்களின் பிரச்னைகளை தைரியமாக எதிா்த்து போராடும் வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் வலியுறுத்தப்பட்டது.

தொடா்ந்து, பொதுமக்களிடையே பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை காவல்துறையினா் விநியோகித்தனா்.

இந் நிகழ்ச்சியில், மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு போலீஸாா் மற்றும் கிராம பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

SCROLL FOR NEXT