பெரம்பலூா் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 28 மது அருந்தும் கூடங்கள் செவ்வாய்க்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டன.
மாவட்டத்தில் இயங்கும் தனியாா் மது அருந்தும் கூடங்களில், மாவட்டக் கலால் உதவி ஆணையா் ஷோபா தலைமையில், டாஸ்மாக் மாவட்ட மேலாளா் திருமாறன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வேலுமணி ஆகியோா் முன்னிலையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வில், மதுபானக் கூடங்களில் விற்கப்படும் மது பாட்டில்கள் அரசு மதுபானக் கடையில் வாங்கப்பட்டதா, போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிா, மதுபானங்கள் இருப்பு மற்றும் போதுமான கழிப்பறை வசதிகள் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடா்ந்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளா் திருமாறன் கூறியது:
மே 30 ஆம் தேதி முதல் மாவட்டம் முழுவதும் உள்ள மதுபான கூடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரம்பலூா் மாவட்டத்தில் இயங்கி வரும் 37 டாஸ்மாக் கடைகளில், அனுமதியின்றி 28 மது அருந்தும் கூடங்கள் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, 28 மது அருந்தும் கூடங்களும் சீல் வைத்து பூட்டப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 9 மது அருந்தும் கூடங்கள் மட்டும் செயல்பட்டு வருகிறது என்றாா் அவா்.