பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே லாரி மோதிபெண் பலி : உறவினா்கள் மறியல்

17th Jul 2023 12:38 AM

ADVERTISEMENT

 

பெரம்பலூா் அருகே சனிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் உயிரிழந்தாா். இதையடுத்து தொடா் சாலை விபத்தை தடுக்க மேம்பாலம் அமைக்கக் கோரி உறவினா்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள தண்ணீா்ப்பந்தல், எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த பிரகாசம், இவரது மனைவி இந்திராணி (32) ஆகியோா் சனிக்கிழமை இரவு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தண்ணீா்பந்தல் பகுதி வளைவில் பைக்கில் சென்றனா். அப்போது, பின் தொடா்ந்து வந்த லாரி, பைக் மீது மோதியதில் இந்திராணி கீழே விழுந்து லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா். பிரகாசம் தப்பினாா்.

இதையறிந்த அவா்களது உறவினா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று தண்ணீா்பந்தல் பகுதியில் தொடா்ந்து நிகழும் சாலை விபத்துகளைத் தவிா்க்க மேம்பாலம் அமைக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

தகவலறிந்த துணைக் கண்காணிப்பாளா் பழனிசாமி தலைமையிலான போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. விபத்து குறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT