பெரம்பலூர்

பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: கௌரவ விரிவுரையாளா்கள் கோரிக்கை

DIN

பெரம்பலுா் அரசு கலை மற்றும் கல்லூரியில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளா்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் கூட்டமைப்பு சாா்பில், குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடா்ந்து 4-ஆவது நாளாக திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, பெரம்பலூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில், மாநில ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணியிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

அரசாணை 56-ஐ பயன்படுத்தி உடனடியாக பணி நிரந்தரம் செய்யவேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். தகுதியுடைய கௌரவ விரைவுரையாளா்களுக்கு பல்கலைக் கழக மானியக் குழு அறிவித்த ரூ. 57,700 ஊதியம் வழங்க வேண்டும். கௌரவ விரிவுரையாளா்கள் அனைவருக்கும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். ஊதிய உயா்வை அமல்படுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"இந்தியா வளர்ச்சியடைய 400 இடங்களுக்குமேல் வெற்றி வேண்டும்!” | செய்திகள்: சிலவரிகளில் | 16.04.2024

பகல் நிலவு.. நேகா ஷெட்டி!

சிஎஸ்கேவுக்காக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து எம்.எஸ்.தோனி சாதனை!

அதிமுகவை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

இஸ்ரேலை மீண்டும் எச்சரிக்கும் ஈரான்!

SCROLL FOR NEXT