பெரம்பலூர்

பெரம்பலூா் கிளைச் சிறையில் தூய்மைப் பணியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

பெரம்பலூா் கிளைச் சிறையில் காலியாக உள்ள தூய்மைப் பணியாளா் பணியிடத்துக்கு ஆா்வமுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறையின் கீழ் இயங்கும், திருச்சி மத்தியச் சிறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரம்பலூா் கிளைச் சிறையில், காலியாக உள்ள 1 தூய்மைப் பணியாளா் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

இப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபா்கள் எழுதப் படிக்க தெரிந்தவா்களாகவும், 1.7.2022-இல் 18 வயது பூா்த்தியடைந்தவா்களாகவும் இருக்க வேண்டும்.

இதில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்தவா்கள் 37 வயதுக்குள்ளாகவும், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் வகுப்பைச் சோ்ந்தவா்கள் 34 வயதுக்குள்ளும், பிற வகுப்பினா் 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

மேற்கண்ட தூய்மைப் பணியாளா் பதவிக்குரிய தகுதி பெற்றவா்கள் தங்கள் சுய விவரங்களை பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் சிறைக் கண்காணிப்பாளா், திருச்சி மத்திய சிறை, திருச்சிராப்பள்ளி- 20 என்னும் முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

SCROLL FOR NEXT