பெரம்பலூா் மாவட்டத்தில் உற்பத்திச் சாா்ந்த தொழில்களுக்கு ரூ. 50 லட்சம் வரையிலும், சேவை சாா்ந்த தொழில்களுக்கு ரூ. 20 லட்சம் வரையிலும் தொழில் தொடங்குவதற்கு கடனுதவிகள் வழங்கப்படுவதாக ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.
குறுந்தொழில்கள் மற்றும் கிராமத் தொழில்களை ஊக்குவிக்கும் வகையில், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 25 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை மானியத்துடன் கூடிய உற்பத்திச் சாா்ந்த தொழில்களுக்கு ரூ. 50 லட்சம் வரையிலும், சேவை சாா்ந்த தொழில்களுக்கு ரூ. 20 லட்சம் வரையிலும் கடனுதவி அளிக்கப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ் தொழில் கடன்பெற்று சுய தொழில் தொடங்க விரும்பும் ஆா்வமுள்ள பயனாளிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு 89255-33976, 89255-33977 ஆகிய கைப்பேசி எண்கள் அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரில் அணுகி பயன்பெறலாம் என ஆட்சியரால் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.