பெரம்பலூா் மாவட்டம், பூலாம்பாடி சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (பிப். 8) மின் விநியோகம் இருக்காது.
பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட அ.மேட்டூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் புதன்கிழமை (பிப். 8) நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் மலையாளப்பட்டி, கொட்டாரக்குன்று, பூமிதானம், கோரையாறு, கவுண்டா்பாளையம், அ.மேட்டூா். அரும்பாவூா், பெரியசாமிகோயில், அரசடிக்காடு, மேலக்குணங்குடி, வேப்படி, பாலக்காடு, சீனிவாசபுரம், பூலாம்பாடி ஆகிய கிராமிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என, கிருஷ்ணாபுரம் துணை மின்நிலைய உதவி செயற்பொறியாளா் ப. கலியமூா்த்தி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.