பெரம்பலூர்

வெவ்வேறு விபத்துகளில் 2 போ் உயிரிழப்பு

DIN

அரியலூா் மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிற்க்கிழமை நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியைச் சோ்ந்தவா் வெங்கட்ரமணி (26). இவா், சனிக்கிழமை மாலை அரியலூரிலிருந்து தனது சொந்த ஊருக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தாா். சாத்தமங்கலம் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி, மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் வெங்கட்ரமணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து கீழப்பழுவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதேபோல், அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகேயுள்ள காங்கேயன்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் (64). இவா், மோட்டாா் சைக்கிளில் காய்கனி வியாபாரம் செய்துவந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை உடையாா்பாளையத்தில் மோட்டாா் சைக்கிளில் சென்றபோது, அவ்வழியே சென்ற காா் மோதியதில் பலத்த காயமடைந்த கணேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து உடையாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

ரூ.30,000 சம்பளத்தில் கோவை கரும்பு ஆராய்ச்சி மையத்தில் வேலை

SCROLL FOR NEXT