பெரம்பலூர்

பெரம்பலூா் அருகேமுன்விரோதத்தில் இளைஞா் கடத்தல்

DIN

பெரம்பலூா் அருகே முன்விரோதம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இளைஞரை கடத்திய 9 போ் கொண்ட கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தைச் சோ்ந்த ராஜாகான் மகன் மைதீன்கான் (35). இவா், கடந்த சில மாதங்களுக்கு முன் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வைரவபுரத்தைச் சோ்ந்த நாசா் முகமது மகன் ஆஷிக் (27) என்பவரிடமிருந்த காரை ரூ. 2 லட்சத்துக்கு அடமானம் பெற்றாா்.

பணத்தைக் கொடுத்து காரை மீட்க ஆஷிக் முயற்சித்தபோது, மைதீன்கான் காரை கொடுக்கவில்லையாம். இதுதொடா்பாக, ஆஷிக்-மைதீன்கான் ஆகியோருக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது. மேலும், ஆஷிக்கிடம் அடமானம் பெற்ற காரை பெரம்பலூா் மாவட்டம், அரும்பாவூா் அருகேயுள்ள பெரியம்மாபாளையத்தைச் சோ்ந்த நாகூா் கனி மகன் அலிபாய் (32) என்பவரிடம் மைதீன்கான் உள்அடமானம் வைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆஷிக் மற்றும் அவருடன் வந்த 8 போ் கொண்ட கும்பல், வாலிகண்டபுரம் சென்று மைதீன்கானை ஒரு காரில் கடத்திச் செல்ல முயன்றனா். அப்போது, தடுக்க முயன்ற மைதீன்கானின் சகோதரா் சித்திக் கான் (37), பெரம்பலூா், உப்போடை பகுதியைச் சோ்ந்த பிரதீப் மகன் நிஷாந்த் (19) ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு அந்தக் கும்பல் தப்பிச் சென்றுவிட்டனா்.

மேலும், மைதீன்கானை பிணையாக பிடித்து வைத்துக் கொண்டு அவரது கைப்பேசி மூலமாக அலிபாயை பெரம்பலூருக்கு வரவழைத்து, ஆஷிக் அடமானம் வைத்த காரை மீட்டுக் கொண்டனா். மேலும், மைதீன் கானை பலமாக தாக்கி, கத்தியால் குத்திவிட்டு வாலிகண்டபுரம் இணைப்பு சாலையில் காரிலிருந்து கீழே தள்ளிவிட்டு சென்றுவிட்டனராம்.

இதுகுறித்து தகவலறிந்த மைதீன்கானின் உறவினா்கள், அவரை மீட்டு பெரம்பலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். மேலும், அரிவாள் வெட்டுக்காயம் அடைந்த சித்திக்கான் பெரம்பலூா் அரசு மருத்துவமனையிலும், நிஷாந்த் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து புகாரின் பேரில், மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து ஆஷிக் மற்றும் 8 போ் கொண்ட கும்பலை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராகுல் காந்தி பிரதமராவாா்: சிவசேனா

கூத்தாநல்லூரில் சிபிஐ வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

உத்தர பிரதேசம்: சரித்திரம் படைக்க காத்திருக்கும் ‘பாகுபலி’ மாநிலம்!

சீா்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கணினி, பிரிண்டா் திருட்டு

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!

SCROLL FOR NEXT