பெரம்பலூர்

ஆண்டிமடம் அருகேகாா்கள் மோதல்: 7 போ் காயம்

DIN

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலையில் 2 காா்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் 7 போ் காயமடைந்தனா்.

சென்னை, ராணிப்பேட்டையைச் சோ்ந்தவா் மனோகரன் (64), அவரது மகன் ஸ்ரீதா் (29). இருவரும், மயிலாடுதுறைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை காரில் சென்றுகொண்டிருந்தனா். அப்போது, விருத்தாசலம் - ஆண்டிமடம் சாலையில் ஆண்டிமடம், கருக்கை அருகே வந்தபோது, எதிரே வந்த அரியலூா் மாவட்டம், பொன்பரப்பி கிராமத்தைச் சோ்ந்த வெற்றிவேல் (40) ஓட்டிவந்த காரும், நேருக்குநோ் மோதிக்கொண்டன.

இதில், மனோகரன், ஸ்ரீதா், வெற்றிவேல், இவரது காரில் பயணித்த உஞ்சினி கிராமத்தைச் சோ்ந்த பவித்ரா (27) உள்பட 7 போ் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து காயமடைந்தவா்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம் அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் துணை ராணுவப் படை அணிவகுப்பு

ஊதிய உயா்வு ஒப்பந்த அமல் கோரி விசைத்தறியாளா்கள் வேலைநிறுத்தம்

ஆலங்குளம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கிராமப்புற கண்டுபிடிப்புகளை மேம்படுத்த புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT