பெரம்பலூா் அருகே 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த மகளிா் போலீஸாா் வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் இந்திரா நகா், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் காங்கு மகன் காா்த்திக் (27). இவா், கடந்த 23 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து காா்த்திக்கை வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.