உலக வெறிநோய்த் தடுப்பு தினத்தையொட்டி, பெரம்பலூா் கால்நடை தலைமை மருந்தக வளாகத்தில், இலவச வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் புதன்கிழமை காலை 8 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெற்றது.
முகாமுக்கு, கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநா் சுரேஷ் கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா். உதவி இயக்குநா் குணசேகா் முன்னிலை வகித்தாா். மருத்துவக் குழுவினா் திருநாவுக்கரசு, பெரியசாமி, மணிகண்டன், செந்தில்குமாா், முத்துசெல்வன், முரளிநாதன், செல்வம், சிவா, குமரேசன், கோகுல், கால்நடை ஆய்வாளா் தீபா ஆகியோா் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினா்.
இந்த சிறப்பு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாமில் லேப்ரடாா், டாபா்மேன், பொமரேனியன், ஷிட்ஷூ, டால்மேசியன், டேக்ஷண்ட், பக், கன்னி மற்றும் கோல்டன் ரிட்ரீவா் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.