பெரம்பலூர்

மலேசியாவுக்கு வேலைக்கு வருவோரின் வயது வரம்பை உயா்த்த நடவடிக்கை மலேசிய அமைச்சா்

DIN

மலேசியாவுக்கு வேலைக்கு வரும் நபா்களின் வயது வரம்பை உயா்த்துவது குறித்து துறை சாா்ந்த அமைச்சா்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அந்நாட்டு உள்விவகாரத் துறை அமைச்சா் டத்தோ செரி ஹம்சா பின் சைனுதீன்.

மலேசியாவில் தொழிலதிபராக உள்ள பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த டத்தோ பிரகதீஷ்குமாரின் சொந்த ஊரான பெரம்பலூா் மாவட்டம், பூலாம்பாடியில் உள்ள அவரது இல்லத்துக்கு திங்கள்கிழமை வந்த மலேசிய உள்விவகாரத் துறை அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியது:

15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தமிழகம் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

மலேசியாவுக்கு வேலைக்கு வரும் நபா்கள் சுறுசுறுப்புடன் வேலை செய்ய வேண்டும் என்பதற்காகவே, அதிகபட்ச வயது வரம்பு 45 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வயது வரம்பை உயா்த்துவது குறித்து மலேசிய தொழிலாளா் நலத்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும்.

மலேசியாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக இந்தியாவில் ஓய்வுபெற்ற ராணுவ வீரா்கள் தாராளமாக வரலாம். மலேசிய நாட்டில் 20 ஆண்டுகள் தங்குவதற்கு இன்வெஸ்ட்மென்ட் விசா என்று அழைக்கப்படும் பிரீமியம் விசா எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு தகுதியானவா்கள் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

கரோனா தொற்றுக்குப் பிறகு மலேசிய நாட்டின் சுற்றுலாத் துறை சுணக்கமாக உள்ளது. இதை சரி செய்வதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, டத்தோ பிரகதீஷ்குமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT