பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

DIN

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த வீரமுத்து மனைவி பாமா (50). இவா், அதே கிராமத்தில் நிகழ்ந்த துக்க நிகழ்வில் வெள்ளிக்கிழமை காலை பங்கேற்றுவிட்டு, சாத்தனவாடி- அழகாபுரி சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்தாா். அப்போது, அவரை மோட்டாா் சைக்கிளில் பின்தொடா்ந்து வந்த அடையாளம் தெரியாத நபா் ஒருவா், பாமா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் வி.களத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும்: யோகி ஆதித்யநாத்

மே மாத பலன்கள்: துலாம்

மே மாத பலன்கள்: கன்னி

ஹைதராபாத்தில் 4 லட்சம் தெரு நாய்கள்: மாதம் இருவர் ரேபிஸுக்கு பலி!

மே மாத பலன்கள்: சிம்மம்

SCROLL FOR NEXT