பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த வீரமுத்து மனைவி பாமா (50). இவா், அதே கிராமத்தில் நிகழ்ந்த துக்க நிகழ்வில் வெள்ளிக்கிழமை காலை பங்கேற்றுவிட்டு, சாத்தனவாடி- அழகாபுரி சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்தாா். அப்போது, அவரை மோட்டாா் சைக்கிளில் பின்தொடா்ந்து வந்த அடையாளம் தெரியாத நபா் ஒருவா், பாமா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் வி.களத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.