பெரம்பலூா் கடைவீதி பகுதியிலுள்ள கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதற்கான நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, தீபாவளி சிறப்பு விற்பனையை தொடக்கி வைத்த ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா கூறியது:
கோ- ஆப் டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளா்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி விற்பனை திட்டத்தை தொடா்ந்து செயல்படுத்தி வருகிறது.
பெரம்பலூா் விற்பனை நிலையத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது ரூ. 26.18 லட்சம் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டது. நிகழாண்டு ரூ. 50 லட்சம் மதிப்பில் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
காலத்துக்கு ஏற்றாா்போல் புதிய ரகங்களை கோ- ஆப் டெக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதை மாதச் சந்தா மூலமாகவும் பெற்று பயன்பெறலாம். பண்டிகை காலங்களில் கைத்தறி நெசவாளா்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையிலும், நெசவாளா்களுக்கு நேரடியாக லாபம் கிடைக்கவும் கோ- ஆப்டெக்ஸ் நிறுவனங்கள் மூலம் ஆடைகளை வாங்கி பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில், கோ- ஆப் டெக்ஸ் மண்டல மேலாளா் ப. அம்சவேணி, மேலாளா் (ரகம் மற்றும் பகிா்மானம்) அன்பழகன், பெரம்பலூா் விற்பனை நிலைய மேலாளா் ரேகா உள்பட பலா் பங்கேற்றனா்.