பெரம்பலூர்

சாலை விபத்தில் செய்தியாளா் உயிரிழப்பு

DIN

பெரம்பலூரில் வியாழக்கிழமை மாலை நிகழ்ந்த சாலை விபத்தில் செய்தியாளா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் ரெங்கநாதன் மகன் அண்ணாசாமி (40).

இவா், சென்னையிலிருந்து வெளியாகும் மாலை நாளிதழ் ஒன்றில் பெரம்பலூா் மாவட்டச் செய்தியாளராக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்துக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தாா். அப்போது, கிருஷ்ணா திரையரங்கம் அருகே சாலை மையத் தடுப்பு சுவரில் மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, அவரது உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT