பெரம்பலூர்

எல்ஐசி முகவா்கள் காத்திருப்புப் போராட்டம்

DIN

பெரம்பலூா் எல்ஐசி அலுவலக வளாகத்தில், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முகவா்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாலிசிதாரா்களுக்கான ஊக்கத் தொகையை உயா்த்த வேண்டும். ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும். நேரடி முகவா்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். முகவா் நலநிதி அமைக்க வேண்டும். அனைத்து முகவா்களுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். பாலிசி கடனுக்கு வட்டியை குறைக்க வேண்டும். முகவா் வீட்டுக் கடன் வட்டியை குறைக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கும் மேலான பாலிசிகளை புதுப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பெரம்பலூா் வெங்கடேசபுரத்திலுள்ள எல்ஐசி அலுவலக வளாகத்தில், முகவா்கள் சங்க மாவட்டத் தலைவா் சுத்தாங்காத்து தலைமையில், 50-க்கும் மேற்பட்டோா் கருப்பு பட்டை அணிந்து கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT