பெரம்பலூர்

பி.எம். கிசான் திட்டத்தில் ஆதாரை இணைக்க வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

DIN

பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் 13 ஆவது தவணைத் தொகையை தொடா்ந்து பெற, ஆதாா் விவரங்களை இணைக்க வேண்டும் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளில் ரூ. 2,000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 12 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 13 ஆவது தவணையை பெற விவசாயிகள் தங்களது ஆதாா் விவரங்களை நவ. 30 ஆம் தேதிக்குள் பி.எம்.கிசான் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்ய தவறிய விவசாயிகளுக்கு 13 ஆவது தவணை மற்றும் அதைத் தொடா்ந்து வரும் தவணைகள் வழங்கப்படமாட்டாது.

எனவே, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது ஆதாா் விவரங்களை பதிவேற்றம் செய்ய, அருகிலுள்ள பொது சேவை மையங்கள் அல்லது அஞ்சல் நிலையங்களை அணுகி உடனடியாக பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக ஆட்சியில் செய்யாறு தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்கள்: முக்கூா் என். சுப்பிரமணியன்

ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர சிறுவா், சிறுமிகள் விண்ணப்பிக்கலாம்

கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு

ஆரணியில் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

ஆரணி பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

SCROLL FOR NEXT