பெரம்பலூர்

நவ. 28, 29 -இல் முதல்வா் வருகை: பெரம்பலூரில் ‘ட்ரோன்’ பறக்கத் தடை

DIN

 பெரம்பலூா் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக முதல்வா் வரவுள்ளதால், பாதுகாப்பு காரணமாக நவ. 28, 29 ஆகிய தேதிகளில் ட்ரோன்கள் (ஆளில்லா சிறிய விமானம்) பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பெரம்பலூா் மாவட்டம், எறையூரில் சிப்காட் தொழில்பூங்காவுக்கு நவ. 28 ஆம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளாா். மேலும், அன்று மாலை அரியலூருக்குச் சென்று அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, 29 ஆம் தேதி காலை அரியலூா் கொல்லாபுரத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் அரியலூா் மற்றும் பெரம்பலூா் மாவட்டங்களுக்கான பல்வேறு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த பணிகளைத் தொடக்கி வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளாா்.

எனவே, தமிழக முதல்வா் வந்து விட்டு மீண்டும் திருச்சிக்குச் செல்லும் வரை ட்ரோன்கள் இயக்கத் தடை விதிக்கப்படுகிறது. எனவே, மேற்கண்ட தேதிகளில் தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடுவோா், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

SCROLL FOR NEXT