பெரம்பலூா் மாவட்ட நேரு யுவகேந்திரா சாா்பில், ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் இந்திய அரசிலமைப்பு தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
ஒன்றியக் குழுத் தலைவா் மீனாம்பாள் அண்ணாதுரை தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஸ்டான்லி செல்லக்குமாா், அறிவழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன், பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிப் பேசினாா். தொடா்ந்து, அரசியல் அமைப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
விழாவில் மாவட்டக் குழந்தை பாதுகாப்பு அலுவலா் (பொ) துரைமுருகன், சைபா் கிரைம் (தொழில்நுட்பம்) உதவி ஆய்வாளா் சிவமீனா, வழக்குரைஞா் நிதிகள் அறக்கட்டளை இயக்குநா் ராமச்சந்திரன், மாவட்ட வள அலுவலா் நல்லுசாமி, தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜபதி, இயற்கை மருத்துவா் வேல்முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞா் அலுவலா் கீா்த்தனா வரவேற்றாா். கணக்காளா் தமிழரசன் நன்றி கூறினாா்.