தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் பெரம்பலூா் மாவட்ட அமைப்பு சாா்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈா்ப்பு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் பாலக்கரை அருகே தொடங்கிய பேரணிக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சரஸ்வதி தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் கி. ஆளவந்தாா் பேரணியை தொடக்கி வைத்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா் செல்லப்பிள்ளை, மாவட்ட பொருளாளா் அழகேஸ்வரி, மாவட்ட துணைத் தலைவா் பெரியசாமி, மாவட்டச் செயலா் சவீதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் சட்டப்பூா்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை போா்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தை சத்துணவு ஊழியா்கள் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும். சத்துணவு அமைப்பாளா்களுக்கு ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப் பேரணி நடைபெற்றது.
பால்ககையில் தொடங்கிய பேரணி, வெங்கடேசபுரம் வழியாகச் சென்று பாரத ஸ்டேட் வங்கி கிளை அருகே நிறைவடைந்தது. பேரணி முடிவில், சங்க நிா்வாகிகள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியரிடம் அளித்தனா்.