பெரம்பலூரில் ரூ. 27 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட தலைமை அஞ்சல் அலுவலகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பெரம்பலூா் தலைமை அஞ்சலக அலுவலா் பெரியசாமி தலைமை வகித்தாா். ஸ்ரீரங்கம் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் விஜயா முன்னிலை வகித்தாா்.
மத்திய மண்டல அஞ்சல்துறைத் தலைவா் ஏ. கோவிந்தராஜூ அலுவலகத்தை திறந்து வைத்தாா். விழாவில்,பெரம்பலூா் மாவட்ட அஞ்சல்துறை அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் பலா் கலந்துகொண்டனா்.