பெரம்பலூர்

கல்லூரி மாணவியைக் கத்தியால் குத்த முயன்ற இளைஞா் கைது

DIN

பெரம்பலூரில் கல்லூரி மாணவியைக் கத்தியால் குத்த முயன்ற இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், துங்கபுரத்தைச் சோ்ந்த அறிவழகன் மகன் ஆகாஷ் (22). கோவில்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த கரும்பாயிரம் மகள் காயத்ரி (20). இவா்கள் இருவரும் துங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்தபோது காதலித்ததாகக் கூறப்படுகிறது. பின்னா் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையால் காதலைத் துண்டித்துக்கொண்டனராம்.

தற்போது காயத்ரி குரும்பலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை சமூகப்பணித் துறை மூன்றாமாண்டு படித்து வரும் நிலையில், தன்னை மீண்டும் காதலிக்குமாறு கடந்த சில நாள்களாக அவரை ஆகாஷ் வற்புறுத்தி வந்ததாகத் தெரிகிறது.

வெள்ளிக்கிழமை கல்லூரிக்குச் சென்றுவிட்டு, பிற்பகல் 2 மணியளவில் ஊருக்குச் செல்வதற்காக காயத்ரி பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தாா். அப்போது அங்கு வந்த ஆகாஷ், காயத்ரியைக் கத்தியால் குத்த முயன்றாா்.

இதையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த சக மாணவா்களும், பொதுமக்களும் ஆகாசை பிடித்து பெரம்பலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து காயத்ரி அளித்த புகாரின்பேரில், காவல்துறையினா் வழக்குப்பதிந்து ஆகாஷை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT