குன்னம் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவா் கைது செய்யப்பட்டாா்.
குன்னம் அருகிலுள்ள சின்ன வெண்மணி வடக்குச் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் வெங்கடேசன் (36). இவா், கடந்த 25-ஆம் தேதி 4 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட நன்னடத்தை அலுவலா் கோபிநாத் அளித்த புகாரின் பேரில், பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, வெங்கடேசனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.