பெரம்பலூர்

பாளையத்தில் முளைப்பாரி ஊா்வலம்

DIN

பெரம்பலூா் அருகிலுள்ள பாளையம் அருள்மிகு மகா மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, முளைப்பாரி ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா மே 8-ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. தொடா்ந்து மே 20,21,22 ஆகிய தேதிகளில் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முளைப்பாரி ஊா்வலம், பால்குடம் எடுத்தலில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று, பிரதான வீதிகள் வழியாக ஊா்வலமாக சென்று அம்மனை வழிபட்டனா். இரவு அம்மன் புறப்பாடு நடைபெற்றது.

தொடா்ந்து, திங்கள்கிழமை தீ மிதித்தல், அலகு குத்துதல் மற்றும் அம்மன் வீதியுலாவும்,

24- ஆம் தேதி காலை 9 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்தலும் நடைபெறுகிறது. 25 ஆம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை மகா மாரியம்மன் திருக்கோயில் பிரமுகா்கள், பொதுமக்கள், இளைஞா் மன்றத்தினா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT