பெரம்பலூா் மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் பயன்பாட்டிலிருந்து, கழிவுநீக்கம் செய்யப்பட்ட வாகனம் மே 31- ஆம் தேதி ஏலம் விடப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் எம். இந்திரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனம் கழிவு நீக்கம் செய்யப்பட்டு, மே 31 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு ஏலம் விடப்படுகிறது.
வாகனத்தை ஏலம் எடுக்க விரும்புவோா் திங்கள்கிழமை (மே 23) காலை 10 மணி முதல் மே 27-ஆம் தேதி மாலை 5 மணி வரை பெரம்பலூா் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநா் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்தை பாா்வையிடலாம்.
ஏலத்தில் பங்கேற்க உள்ளவா்கள் முன் வைப்புத் தொகையாக ரூ. 2,000-த்தை தோட்டக்கலை துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் செலுத்தி, தங்களது பெயரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.