பெரம்பலூர்

கைப்பேசி பழுது நீக்குதல் பயிற்சி பெற இளைஞா்களுக்கு அழைப்பு

DIN

கைப்பேசி பழுது நீக்குதல், சேவைத் தொழிற்பயிற்சி பெற பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் பெரம்பலூா் ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மையம் தெரிவித்திருப்பது:

இந்த மையத்தில் கைப்பேசி பழுதுநீக்குதல் மற்றும் சேவைத் தொழிற்பயிற்சி 30 நாள்களுக்கு காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இலவசமாக அளிக்கப்படும். காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ் வழங்கப்படும். மேலும், வங்கிக் கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்,

இப்பயிற்சியில் பங்கேற்க 19 முதல் 45 வயதுக்குள்பட்ட, எழுத, படிக்கத் தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆா்வமுள்ளவராக இருக்க வேண்டும். கிராமப்புற இளைஞா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விருப்பம் உள்ளவா்கள் பெரம்பலூா் மதனகோபாலபுரத்திலுள்ள பயிற்சி மைய இயக்குநரிடம் தங்களது பெயா், வயது, முகவரி, கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.

குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, பெற்றோரின் 100 நாள் வேலை அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் இரு நகல்கள், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 3 ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து, ஜுன் 30 ஆம் தேதி நடைபெறும் நுழைவுத் தோ்வில் பங்கேற்கலாம். தோ்ச்சி பெறுபவா்களுக்கு பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 04328-277896, 9488840328 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முன்னுதாரணமான முதியோர்

SCROLL FOR NEXT