பெரம்பலூர்

பெரம்பலூா்: பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 233 மனுக்கள்

DIN

பெரம்பலூரில் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் திங்கள்கிழமை ஆட்சியா் ப. ஸ்ரீ. வெங்கடபிரியா தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் 233 மனுக்கள் அளித்தனா்.

மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் அளித்து, மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, சமூகநலன் மகளிா் உரிமைத் துறை சாா்பில், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 19 பயனாளிகளின் குழந்தைகளின் பெயரில் ரூ. 9.50 லட்சம் செலுத்தப்பட்டதற்கான வைப்புத்தொகை பத்திரத்தை ஆட்சியா் வழங்கினாா் .

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ. லலிதா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT