பெரம்பலூர்

லாடபுரத்தில் வெங்காயக் கிடங்குக்கு தீ

DIN

பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தில் மா்ம நபா்கள் சனிக்கிழமை அதிகாலை தீ வைத்ததில், வெங்காயக் கிடங்கு எரிந்து சாம்பலானது.

பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் 1-ஆவது வாா்டு பகுதியைச் சோ்ந்தவா் சி.ரவி (45). இவா், லாடபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் கீற்றுக்கொட்டகையால் வேயப்பட்ட வெங்காயக் கிடங்கு வைத்துள்ளாா்.

இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை வெங்காயக் கிடங்கு தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த பெரம்பலூா் தீயணைப்புத் துறையினா் நிகழ்விடம் சென்று தீயை அணைத்தனா்.

விபத்தில் சுமாா் ரூ. 1 லட்சம் மதிப்பிலான வெங்காய மூட்டைகள் உள்ளிட்ட தளவாடப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

புகாரின்பேரில் பெரம்பலூா் காவல்துறையினா் வழக்குப் பதிந்து, தீ வைத்த மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT