பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரியில் உலக யோகா தினம் வியாழக்கிழமை கொண்டாப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா்.
தருமபுரி மாவட்டம், அரூா் அரசு கலைக் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் முனைவா் பி. செந்தில்குமாா்
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியது:
ஒரு மனிதன் தனது உடல் உறுப்புகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, வாழ்க்கை நெறிமுறைகளை பின்பற்ற யோகா அவசியம். யோகா பயிற்சியில் ஈடுபடுவதால் தனி மனிதனின் ஆரோக்கியம் மேம்படும் என்றாா் அவா்.
தொடா்ந்து யோகாவின் 8 அம்சங்கள், அதன் நோக்கம் குறித்து விளக்கம் அளித்த செந்தில்குமாா், பத்மாசனம், வஜ்ராசனம், யோக முத்ரா, பாதவாஸ்தாசனம், சக்கராஸ்சனம் மற்றும் உடல்ஆரோக்கிய குறிப்புகள், சூரிய நமஸ்காரத்தின் 12 நிலைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தாா்.
இந்நிகழ்வில் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வா் ஜி. பாஸ்கரன், துறைத்தலைவா்கள், பேராசிரியா்கள், முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பயிலும் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
முன்னதாக, தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி முதல்வா் கே. சாந்தகுமாரி வரவேற்றாா்.
நிறைவில், உடற்கல்வி இயக்குநா் ஆ. ராஜா நன்றி கூறினாா். .