பெரம்பலூர்

பெரம்பலூா், அரியலூா் மாவட்ட இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

DIN

பெரம்பலூா், அரியலூா் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் இரு மாவட்ட இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் குன்னம் அருகேயுள்ள மேலமாத்தூா் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை (ஜூன் 25) நடைபெற உள்ளது.

இம் முகாமில், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 150- க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு 30 ஆயிரத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை அளிக்க உள்ளனா். 8 ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு, முதுநிலைக் கல்வி, ஆராய்ச்சிக் கல்வி வரை படித்தவா்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

எனவே, பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்ட இளைஞா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்ட ஆட்சியா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

SCROLL FOR NEXT