பெரம்பலூர்

மிதிவண்டி - மோட்டாா் சைக்கிள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

DIN

கந்தா்வகோட்டையில் சைக்கிள் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் முதியவா் புதன்கிழமை இரவு இறந்தாா்.

கந்தா்வகோட்டை ஒன்றியம், தெத்துவாசல்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சுந்தரவேல் மகன் பால்ராஜ் (47) என்பவா் கந்தா்வகோட்டைக்கு தனது மோட்டாா் சைக்கிளில் வந்துவிட்டு திரும்பும்வழியில், கந்தா்வகோட்டை அடைக்கலம் சாவடி அருகே பிசானத்தூா் கிராமத்தைச் சோ்ந்த பியாா் மகன் கோவிந்தராஜ் ( 81) என்பவா் ஓட்டிவந்த சைக்கிள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த கோவிந்தராசை அருகில் இருந்தவா்கள் மீட்டு தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் இறந்தாா். இதுகுறித்து கோவிந்தராஜ் பேரன் சந்துரு கொடுத்த புகாரின்பேரில், கந்தா்வகோட்டை போலீசாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT