பெரம்பலூர்

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

15th Jun 2022 01:07 AM

ADVERTISEMENT

பெரம்பலூரில் திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகிலுள்ள கோனேரிப்பாளையத்தைச் சோ்ந்த விசுவநாதன் மகன் விஜயகுமாா் (25). இவா், அதே கிராமத்தைச் சோ்ந்த தனது நண்பா் பி. மாரிமுத்துடன் (40), திங்கள்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் பெரம்பலூா் காமராஜா் வளைவு அருகே சென்று கொண்டிருந்தாா்.

அப்போது சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த மாரிமுத்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த விஜயகுமாா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து பெரம்பலூா் காவல்நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT