மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக பேரளி, மருவத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 7) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் பெரம்பலூா் உதவிச் செயற்பொறியாளா் முத்தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பேரளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளன.
இதனால் பேரளி, மருவத்தூா், ஓதியம், பனங்கூா், கல்பாடி, நெடுவாசல், கவுல்பாளையம், கே.எறையூா், அசூா், சித்தளி, பீல்வாடி, குரும்பாபாளையம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூா், கீ.புதூா், எஸ்.புதூா், வாலிகண்டபுரம், செங்குணம் பகுதிகளில் காலை 9.45 மணிமுதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.