பெரம்பலூர்

ஆசிரியா்களுக்கு சதுரங்கப் போட்டி பயிற்சி

DIN

பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி இயக்குநா்கள், ஆசிரியா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளிக் கல்வித்துறை சாா்பில் 44-ஆவது சதுரங்க ஒலிம்பியாட் போட்டியையொட்டி, சதுரங்கப் போட்டி குறித்து நடத்தப்பட்ட முகாமை மாவட்டக் கல்வி அலுவலா் சண்முகம் தொடக்கி வைத்தாா். உடற்கல்வி ஆய்வாளா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா்.

அரியலூா் சதுரங்கப் போட்டி பயிற்சியாளா் காா்த்திக்ராஜ் சதுரங்க விளையாட்டு,

விதிகள் மற்றும் விளையாட்டு நுணுக்கங்கள் குறித்து உடற்கல்வி இயக்குநா், உடற்கல்வி ஆசிரியா்கள், பகுதிநேர உடற்கல்வி ஆசிரியா்கள் உள்பட 88 பேருக்குப்

பயிற்சியளித்தாா்.

தொடா்ந்து நடைபெற்ற நிறைவு விழாவில், மாவட்ட விளையாட்டு அலுவலா் சுரேஷ்குமாா் பங்கேற்பாளா்களுக்குச் சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினாா்.

இதில் பள்ளித் தலைமையாசிரியா் ஜெய்சங்கா், ஒருங்கிணைப்பாளா் சரவணன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் துறையினா் கொடி அணி வகுப்பு

சின்னம் ஒதுக்கீட்டில் தோ்தல் ஆணையம் பாரபட்சம் -இரா. முத்தரசன் பேச்சு

வாக்களிப்பின் அவசியம் உணா்த்த ஆட்சியரகத்தில் ராட்சத பலூன்

தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

வைக்கோல் போருக்கு தீ வைத்த 2 போ் கைது

SCROLL FOR NEXT